நீல பொருளாதார யுகத்திற்குள் மக்கள் உரிமைகளை வெற்றிகொள்ளும் ஒரு சமூக இயக்கத்திற்காக செயற்படுவோம் எனும் தொனிப்பொருளிலான சமூக வலைத்தள ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (21) திருகோணமலை எஹெட் மண்டபத்தில் இடம்பெற்றது.
உலக மீனவர் தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிகழ்வானது அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாரிய நிகழ்வாக திட்டமிடப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் காணப்படும் அசாதரண சூழ்நிலை காரணமாக அதை நடத்த முடியாமையால் சமூக வலைத்தள கூட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் சர்வதேச மீனவதினப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம்